கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,


எனது இந்த பதிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட  GSR க்கு நன்றி 

மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும்  தற்போது  தேவை இல்லாத அழைப்புகள்,  தேவை இல்லாத குறுஞ்செய்திகள்  வருவது  அதிகமாகி விட்டது அதுவும் advertisment  எனப்படும் விளம்பர குருன்செய்திகளே அதிகம் வருகிறது .பெரும்பாலும் நமது மொபைல் என் தெரிய நாமே காரணமாகி விடுகிறோம் .உதரணமாக இணையதளத்தில் இலவச குறுஞ்செய்தி வசதி  உள்ளது எனக்கொண்டால் நாம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதில் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு அக்கறை என பார்த்தல்  நாம் முதலில் நமது மொபைல் என்னை பதிவு செய்வோம் அதான் பிறகு நமது நண்பர்களின் எண்களை அதில் சேமித்து வைப்போம் அப்படியாக கிடைக்கும் மொபைல் எண்களை தொகுத்து ஒரு database  உருவாக்கி எடுத்துகாட்டாக 10000  மொபைல் நம்பர் உள்ள ஒரு database  5000  ரூபாய் என  நிறுவனங்களிடம் என விற்று விடுகின்றனர் இப்படிபல நிறுவனங்களிடமும் database  விற்று விடுகின்றனர் . அது மட்டுமல்லாமல்  நீங்கள் வேலை நிமித்தமாக கொடுக்க படும் resume  மற்றும் browsing  சென்டர்களில்  பராமரிக்கப்படும் வருகை பதிவேடு போன்றவைகளில் இருந்து நமது மொபைல் எண் களவாட பட்டு database களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய படுகிறது . 

                  சமீபத்தில் எனக்கு நடந்த ஒரு நிகழ்வு அடிக்கடி எண் மொபைல் எண்ணுக்கு விளம்பர குறுஞ்செய்திகள்  வந்து கொண்டே இருந்தது முதலில் நான் customer care ல்  தொடர்பு கொண்டு  சொன்னேன் அவர்கள் DND எனப்படும் Do  Not  Disturb  எனப்படும் சர்வீஸ் ல் பதிவு செய்ய சொன்னார்கள்  நானும் பதிவு செய்தேன் . ஒரு அறுபது நட்களிக்கு பிறகு மீண்டும் customer care  ல் தொடர்பு கொண்டு  நெட்வொர்க் சம்பந்தமான  குறுஞ்செய்திகள் வருவது நின்று விட்டன . ஆனால் விளம்பர குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருகின்றன என புகார் செய்தேன். இந்த முறை எந்த என்னில் இருந்து குறுஞ்செய்தி வந்தது என்ற என்னும் கொடுத்தேன். பிறகும் கூட விளம்பர குறுஞ்செய்தி வருவது நிற்கவில்லை.வெவ்வேறு எண்களில் இருந்து விளம்பர குருசெய்திகள்  வந்து கொண்டிருந்தன .ஆனால் மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அழைப்பு வந்தது . தொடர்பு கொண்டவர் சொன்னது இது தான் எண் மொபைல் எண்ணில் இருந்து உங்களுக்கு SMS  வந்ததால் தங்கள்  customer  careல் தொடர்பு கொண்டு புகார் கொடுத்த காரணத்தால் அவருடைய  மொபைல் எண் முடக்கப்பட்டு விட்டது  என்றும் மற்றும் VODAFONE  கம்பெனியில் இருந்து  அவருக்கு சம்மன் வந்துள்ளதாகவும் கூறினார் . அது மட்டுமின்றி SMS  அனுப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் தனது நண்பனிடம் கொடுத்த address  proof ஆல் இப்படி நிகழ்ந்துவிட்ட  தென்றும்  தெரிய படுத்தினர் . தேவையற்ற குறுஞ்செய்திகள் ,அழைப்புகள் வந்தால் customer care ல் தெரியபடுத்துங்கள் நடவடிக்கை எடுகிறார்கள். என்னுடைய எண் AIRTEL தடை செய்யப்பட்ட எண் VODAFONE ஆக தவறு நடந்தால் புகார் தெரிவித்தால் நெட்வொர்க் நிறுவனத்தார் கண்டீப்பாக நடவடிக்கை எடுகிறார்கள் .

          ஆகவே நண்பர்களே தங்களது அடையாள அட்டை , புகைப்படம்  போன்றவற்றை தொலைதுவிடுவதன்  மூலமும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது . மற்றும் உங்கள் மொபைல் எண்ணை முடிந்த மட்டும் பொது  இடங்களில் கொடுப்பதையும் சமூக வலைதளங்களில் (Social network ) இணையங்களில் பதிவதை முடிந்தளவு தவிர்க்கலாம் .

இந்த பதிவு பனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறன் 


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்
தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து
செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்
வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்
அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது
எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது.

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யவேண்டும்..!!