கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

1         நான் இங்கு மதுவினால் ஏற்படும் தீமைகளை பற்றி குறிப்பிடுகின்றேனே தவிர அதை நீ செய்யக்கூடாது என்று சொல்லுகிற உரிமை எனக்கு இல்லை.
2         மேலை நாடுகளில் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் வாரத்தின் இறுதி நாளில் அலுவலக வேலை முடிந்த பிறகு மது அருந்தி அந்த வாரத்தின் இறுதியைய் கொண்டாடுகின்றனர்.
3         ஒரு வேலை இளம் ஆடவன் தனியாக மது அருந்துகிற சூழ்நிலை ஏற்பட்டால் அங்குள்ள இளம் பெண்கள் அந்த ஆடவனையும் துணையாக சேர்த்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வார இறுதியைய் கொண்டாடுகின்றனர்.இது மேலை நாடுகளின் கலாச்சாரம்.
4         நாம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நம்மிள் நம்மக்கள் சிலர் நமது கலாச்சாரத்தில் இருந்து சற்றும் விலகோம். அதனாலேயே இன்றளவில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பேசப்படுகிறது மற்றும் அவரின் போதனைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மதுவினால் ஏற்படும் தீமைகள்:
1         சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2         குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3         நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4         நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5         நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6         நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.
7         மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8         குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9         இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:
1         குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2         மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3         கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது.


2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது
உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும்
நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை!!!.