கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,




ஒரு  கட்சியே  அதன்  தலைவர்கள் மீது   வழக்கு தொடர்ந்த கொடுமையை இன்று தட்ஸ்தமிழ் இணைய தளத்தை வாசிக்கும் போது கண்டு மிரண்டு போனேன். இந்த கொடுமையை கண்டிக்க ஆளே இல்லையென தீர்மானித்து நானே களத்தில் குதித்தேன். அது எப்படி ஒரு கட்சி அதன் தலைவர் மீது வழக்கு தொடரும் என நீங்க எல்லோரும் கேக்கலாம் நானும் அதையே தான் தட்ஸ்தமிழ் வாசிக்கும் போது எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் அந்த கேள்விய  உங்க கிட்டயும் கேக்குறேன் எப்படி ஒரு கட்சி அதன் தலைவர் மீதே வழக்கு தொடுக்கும் ? அப்படி தொடுக்காது  எனும் பட்சத்தில் தட்ஸ்தமிழ் கொடுத்த செய்தி தவறா? . அப்படி தப்புன்னா எப்படி இவ்ளோ தைரியமா தப்பான செய்திய  வலைத்தளத்தில்  குடுகிறார்கள் ? அப்ப படிப்பவர்கள் என்ன கேனையா? தெரிஞ்சே  இப்படி ஒரு தப்புன்னா? தெரியாம எத்தன தப்பான செய்திய குடுத்திருப்பாங்க? இது நான் வன்மையாக கண்டிக்கிறேன் 
  
தட்ஸ்தமிழ் இணையத்தில் வந்த அந்த செய்தி 

    V/S 
ஒபாமா                                                                        ஒசாமா 
(OBAMA)                                                                         (OSAMA)

( ஒரு எழுத்து வித்தியாசத்தால் உலகின் எதிரெதிர் துருவமாய்  மாறிய மனிதர்கள் )


அமெரிக்க தலைவர்                                           அல்கொய்தா தலைவர்

 உலக மக்களால்                                                   உலக மக்களால்   
ஆச்சர்யமாக                                                         அதிர்ச்சியோடு  
பார்க்கப்பட்ட                                                         பார்க்கப்பட்ட  
அமெரிக்கர்                                                             அரேபியர்  


 இவர்  செய்வது                                                    இவர் செய்தது     
அதிகாரம்                                                                 அராஜகம் 

ஜனநாயகத்தால்                                                  தீவிர  வாதத்தால் 

அதிகாரம்  பெற்றார்                                           அராஜகம் செய்தவர்  


மக்களாட்சி                                                            இவரால் தீவிரவாதம் 
இவரை வளர்த்து விட்டது                             வளர்க்கப்பட்டது 


அதிகாரத்தால்                                                      அராஜகத்தால் 
உயர்ந்தார்                                                               அழிந்தார் 
(அழிக்க உத்தரவிட்டது )                                  (உயிரை விட்டது )

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
அவருக்கு எங்கேயும்  உண்டு மதிப்பு
இப்படி அனைவரும் கற்க வேண்டிய கல்வி இன்று வணிக மயமாகி  விட்டது காலத்தின்  கொடுமை இல்லை நம்மை அரசாலும் அரசியல்  வாதிகளால்  செய்யப்படும் கொடுமை.

                        கல்வி மட்டுமே ஒரு நல்ல சமுதாயத்தை  உருவாக்கும் என்ன எண்ணி இலவச கல்வியும்  , பாமரனின் குழந்தையும் பசி இல்லாமல் படிக்க வேண்டும் என  இலவச மதிய உணவு திட்டத்தை உருவாக்கி  ஏழையின்  குழந்தையும் பள்ளிக்கு வந்து  கல்வி கற்க வழி ஏற்படுத்தினர் காமராஜர். 

                     ஆனால் இன்று கல்வி வியாபாரமாகி கிடக்கிறது.   ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே நல்ல வேலையும், நல்ல  மதிப்பையும் பெற முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தி  விட்டனர் இன்றைய அரசியல் வாதிகள். அரசு பள்ளிகள் அனைத்தும் தமிழ் வழியில் போதிக்கின்றன . matriculation, CBSE மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஆங்கில வழியிலேயே படங்களை போதிக்கின்றன . தமிழ்,  தமிழ் என பேசும் இன்றைய அரசியல் வாதிகளால்  எத்தனை M.A தமிழ்  B.A தமிழ் படித்தவர்களுக்கு வேலை தர முடிகிறது. எத்தனை கல்லூரிகளில் தமிழ் என்ற பிரிவு இருக்கிறது. தமிழக அரசு தமிழில் போதிக்குமாம் ஆனால் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அரசு வேலை இல்லையாம். என்ன அரசாங்கம் இது.

                   தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் நிறைய  இருகின்றன அதில் ஆரம்பபள்ளி , தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி  இப்படி விதவிதமான பள்ளிகள் தமிழ்நாட்டில்  தமிழக அரசு நடத்திக்கொண்டு இருக்க  matriculation  அப்படின்னு சொல்ல படுகிற ஆங்கில வழி பள்ளில தான் என் பிள்ளைய சேர்ப்பேன் என பெற்றோர்கள் ஏன் அடம் பிடிகிறார்கள்.. ஒரே காரணம்   கல்வியின் தரம் அவ்வுளவுதான். தரம் அப்படிங்குற  ஒரே காரணத்துக்காக தான் matriculation பள்ளியிலும்  CBSE  பள்ளியிலும் தம் பிள்ளையை சேர்க்க இந்த பெற்றோர்கள் தவியாய் தவிக்கிறார்கள்.

                    அரசு பள்ளியில் ஆங்கிலமே பேருக்குத்தான் சொல்லி தரபடுகிறது. ஆனால் Maticulation, CBSE  ஆங்கில வழியில் மட்டுமே  சொல்லி தரபடுகின்றன. அங்கே படிக்கும் குழந்தைகள்  தொடக்கத்திலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக  பேசவும், படிக்கவும், எழுதவும், கற்றுகொள்கின்றனர் அந்த காரணத்தால் அவர்களால் +2 முடித்தவுடன் அனைத்து entrance  என்று சொல்லபடுகின்ற நுழைவுத் தேர்வுக்கு எளிதாக  ஆயத்தமாக முடிகிறது. அந்த காரணத்தால் அவர்கள் எளிதில் மேல் படிப்பு படிக்கவும் முடிகிறது எளிதில் வேலை தேடிக்கொள்ளவும் முடிகிறது . இந்த காரணங்களுக்காகத்தான் பெற்றோர் தனியார் பள்ளியில்   சேர்த்து விட துடியாய் துடிக்கிறார்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தனியார் பள்ளிகளும் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணங்களை முடிவு செய்து கல்வி கொள்ளையில் ஈடுபடுகிர்ரர்கள். இது ஒரு புற மிருக்க சமீப காலமாக அரசு நடத்தி வரும் பள்ளிகளுக்கு மூடு  விழா நடத்த படுவதாக செய்திதாள்களில் பார்த்தேன் ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு பள்ளியுமாக தனியார் பள்ளிகள் மட்டும் முளைத்துக் கொண்டே இருகின்றன..

                          ஏன் இப்படி என யோசித்தால் அரசு பள்ளிகளின் கல்வி தரம் இல்லை. தரமான கல்வி இருந்தாலும் அதை போதிக்க ஆசிரியர் இல்லை. அப்படியே ஆசிரியர் இருந்தாலும்  அந்த பாடத்தை புரிந்து நடத்த அவருக்கு தகுதி இல்லை இப்படிப்பட்ட காரணங்களால்  நடுத்தர வர்க்கத்தினர் தனது பிள்ளையின் எதிர் காலம் சிறப்பாக இருக்க தனியார் பள்ளிகளை  தேர்ந்தெடுகின்றனர். அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தினாலும் நடத்தா விட்டாலும் ஊதியம் தர அரசு இருக்கிறது. இடையில் சம்பாதிக்க டூஷன்  இருக்கிறது. நான் படித்த அரசு பள்ளி களிலும் சரி பக்கத்தில் இருந்த பள்ளிகளிலும் சரி ஆங்கிலத்தை ஆவலோடு கற்றுத்தர ஒரு ஆசிரியர் இல்லை. அவரே சொல்லுவர் ஆங்கிலம் கஷ்டம் master நோட்சோ அல்லது ஜெயக்குமார் நோட்சோ வாங்கி படித்து  பாசாகி  கொள்ளும் படி சொல்லுவர் அப்படி அவர்கள் ஆங்கிலத்தை கற்று தராத காரணத்தால்  ஆங்கிலம் என்றால் வேம்பாய் கசந்தது. ஆங்கில இலக்கணம் என்றால் அதை விட கசந்தது. இப்படி சொல்லி தரப்பட்ட  மாணவனால் எப்படி நுழைவுத்தேர்வை சந்திக்க முடியும். கடைசியில் +2  முடித்து விட்டு எதோ ஒரு வேலைக்கு தான் போக முடியும்  உயர் கல்வி எல்லாம் கற்க முடியாது ஏனெனில் அங்கேயும் ஆங்கிலம் தானே இருக்கும்.சிலர் விதி விலக்காக இவ்வளவு இன்னல் களையும் தாண்டி வென்று விடுவார்கள்  அவர்களில் பெயர்களை சொல்லியே இந்த ஆசிரியர்களும் காலத்தை ஓட்டி ஒய்வு பெற்று விடுவார்கள். அடுத்த ஆசிருயரும் இப்படியே தொடர்ந்ததால் தான் இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கி பெருகி விட்டன.

                    இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில் இந்த அரசு தான் முயற்சிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அனைத்து பாடங்களும் கற்பிக்க தகுதியான   ஆசிரியரை பணியமர்த்த வேண்டும். பணி செய்யும் ஆசிரியரின் தகுதியை  இரண்டு அல்லது மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை  சோதனை செய்ய வேண்டும். பணி தொய்வு இருப்பின் அதை களைய முயற்சி எடுக்க வேண்டும். தகுதியற்ற ஆசிரியர்களை தகுதியை உருவாக்கிக்கொள்ள வாய்பளிக்க  வேண்டும். அப்போதும் தகுதியை உருவாக்கி கொள்ள வில்லையெனில் அவரை வேறு துறைக்கு மாற்றி தகுதியானவரை பணியமர்த்த வேண்டும்.  அப்போது தான் கல்வி தரம் உயரும். நுழைவுதேர்வு  நடத்தியே உயர் கல்விக்கு தகுதியை உறுதி செய்ய சொல்லலாம் அப்போது கிராமத்து மாணவனும் நுழைவுத்தேர்வில்  எழுதி மேல் படிப்பை தொடருவான்  அதை விடுத்து  நுழைவுத்தேர்வை ரத்து செய்கிறேன், பத்தாம் கிளாஸ் தேர்வை ரத்து செய்கிறேன் என்று கல்வியின் தரத்தை குறைக்கும் வேலையை செய்யாதிருக்கவேண்டும். அப்போது இந்த கல்விக்கொள்ளை காணமல் போகும் அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த ஒரு அரசியல்வாதியும் முயற்சி செய்ய மாட்டார்கள்  ஏனெனில் அவர்கள் தானே தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அரசு பள்ளியின் கல்வி  தரத்தை உயர்த்தாமல்  தனியார் பள்ளியின் கல்வி கட்டணத்தை குறைக்க அரசு முயற்சி செய்வதும் நீதிபதி களை கொண்டு  கமிட்டி  அமைத்து கட்டணத்தை குறைக்க சொல்லுவதும் தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகத்தான்  இருக்கும். எந்த வித மாற்றமும் இருக்காது. இப்போது சொல்லுங்கள் இந்த கல்வி கொள்ளை நடக்க இந்த அரசு தான் காரணம் என நான் சொல்வதில் என்ன தவறு ?.
 
                                 அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை  உயர்த்தி  தேர்ந்த ஆசிரியர்களை  கொண்டு  கல்வி போதித்தால் தனியார் பள்ளிகளை தேடும் பெற்றோர் அரசு பள்ளிகளில் தமது குழந்தையை சேர்ப்பார்கள். அப்போது தனியார் பள்ளிகளின் சேர்க்கை விகிதம் குறையும் அப்போது தானாக கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளும் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் அதற்கு நீதிபதியும்  வேண்டாம் அரசும் வேண்டாம் எல்லாம் தன்னாலே சரியாகும் அரசு பள்ளி கல்வியின் தரம் உயரும் போது செய்யுமா இந்த அரசு ?????

கடமையை செய்
பலனை எதிர் பாராதே!
இது பழ மொழி...

நேற்று நமது கடமையை செய்ய வேண்டிய நாள் 
நேற்று எத்தனை பேர் தனது கடமையான வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்கும் கடமையை  செய்து  இருப்பார்கள். நேற்று பதிவான வாக்குகள்  தான்  தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகமாக பதிவான வாக்குகளாம். பெரும்பாலும் படித்தவர்கள் அரசியலை பற்றியும், ஊழலை பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் வாய் கிழிய பேசுவார்கள். ஆனால் செயல் என்று வரும்போது நமக்கென்ன  நாம் போடும் ஒரு ஓட்டு தான் இந்த ஆட்சியை மற்ற போகிறதா?  அல்லது நம்  ஒரு ஓட்டு தான் நாம் நினைக்கிற ஆட்சியை தர போகிறதா? என எண்ணி வாக்களிக்க செல்லாமலே இருந்து விடுவார்கள்.

படித்தவர்கள் வாய் கிழிய பேசினாலும் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க மாட்டேன் என்கிறார்கள். என்னுடன் படித்த இன்று சென்னையில்  IT  கம்பெனிகளில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பலர் வாக்களிக்க வரவில்லை. ஆனால் தேசம் கொள்ளை போகிறது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல், எதற்கெடுத்தாலும்  லஞ்சம்  என குற்றம் சொல்லும் இவர்கள் தேர்தல் நாளை சந்தோசமாக கழிக்க சென்னையிலே தங்கி விட்டிருக்கிறார்கள். இவர்களால் அவரவர் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாதா என்ன? முடியும் ஆனால்  கடமையை செய்ய மறுக்கும் இவர்களுக்கு கிடைத்த காரணம் என் வாக்கு மட்டும் எதுவும் மாற்றாது.

ஆனால் எங்கள் ஊரில் இருந்து  பெங்களுருக்கு கூலி வேலை செய்ய சென்ற 40 கூலி தொழிலாளர்கள் தனது ஜனநாயக கடைமையாற்ற  மூன்று நாள் வேலையை விட்டு சம்பாதித்த  பணத்தை செலவு செய்து வாக்களிக்க  வந்து சென்ற அவர்களுக்கு  இருக்கும் வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது நமது கடமை  என்ற  எண்ணம் கூட இல்லையே படித்த அறிவு ஜீவிகளுக்கு.  படிக்காமல் போனாலும் ஜனநாயக கடமையாற்ற வந்த  அவர்களின் மேல் மதிப்பும் மரியாதையும்  தானாகவே  வருகிறது.
படித்தவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக களம்  இறங்க வேண்டுமென்பதே என்னுடைய ஆவல்... 



வீடு தோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும்’’ என்பதில் ஆரம்பித்து, ‘‘ஏழைகளுக்கு ரேஷன் மூலமாக மாதம்தோறும் முப்பத்தைந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்...’’ என்பது வரையில் இலவசங்களை சகட்டுமேனிக்கு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாரித் தெளித்திருக்கிறது தி.மு.க. தலைமை.


வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தேர்தல் அறிக்கை பற்றி, பொருளாதார வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள்?


சென்னையின் பிரபல ஆடிட்டரும் பொருளாதார வல்லுநருமான எம்.ஆர். வெங்கடேஷை சந்தித்து, தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றிய கருத்து 
 
‘‘முதலில் குஜராத் விஷயத்தைச் சொல்லிவிட்டு தமிழகத்துக்கு வருகிறேன்... 2007&ம் ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி.யின் நரேந்திர மோடியை வீழ்த்துவதற்காக, வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப் போவ-தாக அறிவித்தது காங்கிரஸ்.


இதுபற்றி நரேந்திர மோடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் இலவசம் எல்லாம் தரமாட்டேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை கட்டாதவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப் போகிறேன்... வரி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவேன்... இலவசத்தைக் கொடுத்து மக்களை கெடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வர மாட்டேன்...’ என்று சொன்னார்.


எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சிலர், ‘ஆணவத்தின் உச்சத்தில் இருந்து நரேந்திர மோடி பேசுகிறார்...’ என்று கூட விமர்சனம் செய்தார்கள். ஆனால், அது குறித்தெல்லாம் அவர் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை மட்டும் சொல்லி, ஓட்டுக் கேட்டார். பெரும் வெற்றி அடைந்தார்.


அப்படிப்பட்ட குஜராத் எங்கே? ‘வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கியாச்சு... அடுத்து என்ன இலவசம்’ என்று காத்திருக்கும் தமிழகம் எங்கே?’’ என்று வருத்தப்பட்ட வெங்கடேஷ் தொடர்ந்தார். ‘‘ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு நிர்வாகம், கடனுக்-கான வட்டியாக மட்டும் வருடத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்திக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், தமிழகம் பொருளாதார ரீதியில் எவ்வளவு கீழான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்-கிறது என்பதைப் பாருங்கள்.


நாட்டின் கடன் என்றாலும், அது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கடன்தான் என்பதை நாம் யாரும் இன்னும் உணரவில்லை. அப்படி உணர்ந்தால் இலவசங்களைத் தேடி ஓடமாட்டோம்.


அடுத்த தலைமுறைக்கு கடனை சுமத்தாமல் இருப்பதுதான் நல்ல பெற்றோரின் கடமை. ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்தானே..? ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் பல தலைமுறைகளையும் சேர்த்து கடன்-காரர்களாக்கியிருக்கிறார்கள்’’ என்று பொதுவாக சொன்ன வெங்கடேஷ், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு வந்தார்.


‘‘தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி, வளமான வாழ்வுக்கு வழிகோலாமல், மிக்ஸியையும் கிரைண்டரையும் இலவசமாக வழங்கி, வாக்காளனை பிச்சைக்காரனாக வைத்திருக்கவே திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச தொலைக்-காட்சிக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செல-வழிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த 5 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து காவிரி, தாமிரபரணி, சிறுவாணி போன்ற தமிழக நதிகளை இணைத்திருந்தால், தமிழ-கத்தின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும். விவசாயம் காப்பாற்றப்பட்டு, நீண்டகால பொருளாதார மேம்பாடு கண்டிருக்கலாம். தமிழகத்தின் அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் சென்னை பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், அந்தத் துறையை தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் விரிவு-படுத்தும் எந்த திட்டமும் இல்லை.


உற்பத்திப் பெருக்கம், கட்டுமானம், கல்வி, தொழில், சாலை வசதி, போக்குவரத்து வசதி, உயர் கல்வி வசதி, தொழில் கல்வி, சுகாதார மேம்பாடு இப்படி எந்த விஷயத்திலும் அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்தி பலப்படுத்துவது குறித்தும், தொலை நோக்குப் பார்வையோடு யோசித்து அறிக்கை தயார் செய்யப்-படவில்லை.


மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்தால்தான் ஒரு மாநிலம் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அது தெரிவதில்லை. காரணம், மின் உற்பத்தியைப் பெருக்குவதால், அவர்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது போல. இன்றைக்கு அரசியல்வாதிகள் அரசியலை வர்த்தகமாக்கி விட்டதன் விளைவுதான் இத்தனையும்.


எந்த வர்த்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் தலைபட ஆரம்பித்ததால், அந்நிய முதலீடும் உள்நாட்டு முதலீடும் தமிழகத்துக்கு வருவது குறைந்து விட்டது. எந்தத் தனியாரும் பயமில்லாமல் தொழில் செய்ய முடியவில்லை. கேட்டால், ‘ஹூண்டாய் கார் கம்பெனி இல்லையா?’ என்பார்கள். அதிகார மையத்தில் இருப்பவர்கள் கார் வர்த்தகத்தில் நுழையாத வரையில்தான் ஹூண்டாய் கார் தொழிற்சாலை பிரச்னையில்லாமல் இயங்கும். தமிழக மின் வாரியம் இன்றைக்கு கிட்டத்தட்ட செத்துவிட்டது. சுமார் 35,000 கோடி ரூபாய் வரையில் கடனில் இயங்குகிறதாம். அதை நிமிர்த்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அப்படி இருக்கும்போது மின் உற்பத்தி எப்படி நடக்கும்? இந்த லட்சணத்தில் இலவச மின்சாரத்தை தகுதியில்லாத பயனாளிகளுக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இலவசங்களை, தொடர்ந்து நாம் அனுமதிக்க... அனுமதிக்க... ஜனநாயகம் என்னும் அற்புதமான விஷயத்-தை நாம் இழந்து கொண்டே இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, இலவசங்களை தவிர்த்தால் அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது...’’ என்று முடித்தார் ஆடிட்டர் வெங்கடேஷ்.

நன்றி : தமிழக அரசியல்  

சாப்பிட சாப்பாடு இலவசம்,

உடுக்க ஆடை இலவசம்,

படுத்து உறங்க இடம் இலவசம் ,

தூங்கி எழுந்தவுடன் தேநீர் இலவசம்,

படம் பார்க்க டிக்கெட் இலவசம்,

பயணம் செய்ய பயணசீட்டு இலவசம்,

தேர்வுக்கு முன்னால் பதில் புத்தகம் இலவசம்,

படிக்கும் முன்னே பட்டம் இலவசம்,

படித்த பின்னே "வேலை இல்லாதவன் " என்ற பட்ட பெயர் இலவசம்,

பேசுவதற்கு செல்போன் இலவசம்,

பேச பேச டாக் டைம் இலவசம்,

பேசி முடித்தவுடன் இளநீர் இலவசம்,

கணவன் இல்லாதவர்க்கு கணவன் இலவசம்,

மனைவி இல்லாதவர்க்கு மனைவி இலவசம்,

குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை இலவசம்,

24 மணி நேரமும் டாஸ்மாக் ல் சரக்கு இலவசம்,

இப்படியாகத்தான் இருக்கும் 2016 ம் ஆண்டு தேர்தல் அறிக்கை

விழித்திடுங்கள் மக்களே விழித்திடுங்கள் இலவசங்கள் வேண்டாம் இலவச பொருட்களும் வேண்டாம் எல்லா பொருளும் வாங்குமளவுக்கு என் பொருளாதரத்தை உயர்த்த மட்டும் வழி செய்தால் நானே அனைத்தையும் வாங்கி கொள்வேன். அப்படி எண்ணுங்கள் இலவசத்தின் பின்னே அலையாதீர்கள்.


அதிமுக , திமுக இரண்டு கட்சிகள் தான் இந்த தமிழ் நாட்டை ஆள வேண்டுமா? வேறு ஒருவருக்கு ஒரு சந்தர்பம் தர கூடாதா? உங்கள் ஊரில் நல்லவர்களே இல்லையா? அவர்களை தேர்தலில் நிறுத்துங்கள் , அவர்களை ஜெயிக்க வையுங்கள் அவர்கள் மூலமாக உங்கள் ஊருக்கு தேவையான தேவைகளை நிறைவேற்றி கொள்ளுங்கள் அதை விடுத்து அதிமுக திமுக என மாறி மாறி ஓட்டு போடுவதால் தான் அவர்களின் குறிக்கோள் ஆட்சியை பிடிப்பதிலும் இலவசங்களை கொடுத்து மக்களை முட்டாளாக்குவதிலும் முனைப்புடன் செயல் படுகிறார்கள் .


மக்களின் வாழ்க்கைதரம் உயர்ந்து வாங்கும் சக்தி உயர்ந்தால் அவர்களாகவே அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு இலவசம் தேவைபடாது. இவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது கோடி கோடியாய் கொள்ளை அடிக்க முடியாது அதனால் தான் இலவசங்களை நமக்கு கொடுத்து இஷ்டத்துக்கு கொள்ளை அடிகிறார்கள்.

இலவசங்கள் என்ன அவங்க அப்பன் வீட்டு பணத்தில் இருந்த தருகிறார்கள் இல்லையே நாம் கொடுக்கும் வரி பணத்திலிருந்து தானே தருகிறார்கள் வரி பணம் மட்டும் அல்லாமல் கடன் வாங்கி அல்லவா இலவசங்களை தருகிறார்கள். அந்த கடன் யாருக்கு சொந்தம் ஆட்சி செய்தவர்களுக்கா? இல்லையே குடி மக்களாகிய நமக்குதானே? இலவசங்கள் நமக்கு பெருமை அல்ல . இலவசங்களால் நாம் கடனாளியாவது மட்டுமல்ல நமது சந்ததியையும் சேர்த்து கடன்காரர்களாக மற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.


இலவசங்கள் கொடுக்க செலவு செய்யும் வரி பணத்தை வைத்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாமே? அதன் மூலம் வாழ்க்கைதரம் உயரும். வாழ்க்கைதரம் உயர்ந்தால் அதன் மூலம் வாங்கும் தரமும் உயரும். இன்று இலவசங்கள் என்ற பெயரில் கொடுக்கும் அனைத்தையும் நாம் உழைத்து வாங்கி கொள்ளலாமே? உங்களை சிந்திக்கவிடாமல் , உழைக்கவிடாமல் , உயரவிடாமல் சோம்பேறியாக்கும் முயற்சியே இலவசம்.

தமிழகம் என்றோர்

ஊருண்டு - அங்கே

தகிடுதத்தங்கள்

நிறைய உண்டு

அண்டி பிழைக்க

அரசியலுண்டு - மக்களை

ஆட்டி படைக்க

ஆட்சி உண்டு - ஆட்சியை

பிடிக்க பணம் உண்டு

பணத்தை எடுக்க

பதவி உண்டு

பதவியை வைத்து

பல கோடி கொள்ளை

அடிப்பதுண்டு....


சிந்தியுங்கள் வாக்காளர்களே சிந்தியுங்கள் .