கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

1. முதல் நாலு ரவுண்டு அடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு ஐந்தாவது ரவுண்டில்,போன வருச மேட்டரை இழுத்து நான் பண்ணது தப்பு தாண்டான்னு சீன் போடுவது ஏன்?

2.குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?

3.என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!

4.எப்போ ஆஃப்பாயில் போட்டாலும், ஸாரி மச்சி சரக்கு மாத்தி அடிச்சிட்டேன் என்றோ, மச்சி இந்த கடையில டூப்ளிகேட் சரக்குடா, இனிமே இங்க வரக்கூடாதுன்னு நீ மட்டும் சீன் போடுவது ஏன்?

5.அது எப்படி சித்தப்பு சரக்கு அடிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணுல அணைகட்டு உடைஞ்சா மாதிரி தண்ணி பொலபொலன்னு வருது!

6.தண்ணிய போட்டோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம, கொஞ்சம் மப்பு ஏறுனவுடன் பார் சப்ளையருகெல்லாம் சரக்கு வாங்கி தர்ற வள்ளல் ஆகிறுருயே எப்படி?

7.அவசரத்துக்கு நூறு, இரநூறு கேட்டா இல்லைம்ப! சரக்கு மட்டும் கேக்காட்டியும் குவாட்டர் குவாட்டரா வருதே எப்படிடா?

8.சாதரணமா நாய் குழைச்சாலே அடுத்த தெருவில முட்டிட்டு ஓடுவ! ஆனா சரக்க போட்டா மட்டும் பக்கத்து நாட்டு பிரதமரையே வெட்டுவேன்னு அருவா எடுக்குறியே எப்படி மாப்பி!

9.புதுசா கூட சரக்கடிக்கிறவங்கிட்ட ஒரு ஃபுல்ல ரெண்டு ரவுண்டுல அடிப்பேன்ன்னு டரியலாக்கிட்டு, ஒரு ஃபுல் கிங்பிஷ்ஷர் பீர்ன்னு ஆர்டர் கொடுக்க எப்படிடா தைரியம் வருது!

10.மப்புல வீட்டுக்கு வந்து ட்ராப் பண்ணும் போது வீட்டுக்கு பத்தடி தூரத்துல எல்லா மப்பும் காணாம போயி, மச்சி இப்படியே நீ அப்பீட்டு ஆகிகன்னு ஃப்ரெண்டை எப்படிடா உன்னால துரத்த முடியுது!

11.நீ சரக்கடிச்சேன்னு ஊருகெல்லாம் காட்டுறதுக்கு நைட்டு போனை போட்டு எல்லாத்து வயித்துலயும் நெருப்ப பத்த வைக்கிறியே ஏன் இப்படி?


:பதினொன்னு இருக்கோ! ஸாரி மப்புல நம்பர் சரியா தெரியல!