Pages
தலைப்புகள்
- அரசியல் (7)
- ஆன்மா (1)
- உடல் நலம் (2)
- கடமை (1)
- கணிணி ட்ரிக்ஸ் (6)
- கணிணி தீர்வு (5)
- கதைகள் (11)
- கவிதைகள் (1)
- சிந்தனைகள் (18)
- சிரிப்பு (23)
- செயல் வீரர் (1)
- தன்னம்பிக்கை கதைகள் (2)
- துரோகம் (1)
- நீதி கதைகள் (6)
- படங்கள் (20)
- பொது (6)
- மொக்கை (11)
- வாய்ச்சொல் வீரர் (1)
- ஸ்பெக்ட்ரம் (1)
நண்பர்கள்
அதிகமாக வாசிக்கப்பட்டவை
இலவசங்களே நமது நாட்டின் சாபக்கேடு.. ஏன் தருகிறார்கள், இலவசம் எதற்கு தருகிறார்கள் இலவசம், ஏன் தருகிறார்கள் எனில் ஓட்டு வாங்க , எதற்கு தருகிறார்கள் எனில் ஆட்சியை பிடிக்க.. ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆட்ச்சியை பிடித்து கொள்ளை அடிக்க வேண்டும் . அவ்வளவுதான் அவர்களின் எண்ணம் நாடு முன்னேற வேண்டும். நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் அப்படியல்ல அவர்கள் எண்ணம். நாம் முன்னேற வேண்டும் நம் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். நாமே முதல்வராகவோ, பிரதமராகவோ இருக்க வேண்டும். நம்மிடமே அதிகாரம் அனைத்தும் இருக்க வேண்டும்.எல்லா துறைகளிலும் நாமே முதலாவதாக இருக்க வேண்டும். அதற்கு நான் தான் ஆள வேண்டும். நாமே ஆள வேண்டுமெனில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். நாம் ஜெயிக்க மக்கள் ஓட்டு போடா வேண்டும். நமக்கே அவர்கள் வாக்களிக்க அவர்களை சந்தோஷ படுத்த வேண்டும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சத்தை நேரடியாக எப்படி கொடுப்பது இந்த ஜனநாயக நாட்டில் அதற்கு பயன்படுவது தான் இலவசங்களும் தள்ளுபடிகளும். இலவசங்களை வாங்கும் நாம் நன்றி கடனாக நம்மை ஐந்து வருடங்கள் அவர்களிடம் அடகு வைக்கிறோம். அடுத்த ஐந்தாவது வருடம் ஓட்டுக்கு காசு தரவும், தன்னை வளபடுதிக்கவும் , தான் குடும்பத்தை வளப்படுத்தவும் கொள்ளை அடிகிறார்கள். கொள்ளை அடிக்க அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் அந்த அதிகாரத்தை கொடுத்தது யார் நாம் தானே. அப்போது அவர் கொள்ளை அடிக்க யார் காரணம் அதிகாரத்தை கொடுத்த நாம் தான் காரணம். இலவசம் கொடுக்கிறான், தள்ளுபடி பண்றான், காசு குடுக்கிறான், நமக்கு என்ன பண்ணுவான், நம்ம ஜாதிக்கு என்ன பண்ணுவான் அப்படின்னு ஓட்டு போடுறத விட்டுட்டு நம்ம ஊருக்கு என்ன பண்ணுவான் நம்ம நாட்டுக்கு என்ன பண்ணுவான் அப்படின்னு யோசித்து ஓட்டு போடும் மக்கள் அதிகமானால் தான் இந்த நாடு ஜனநாயக வழியில் சென்று வல்லரசாகுமே தவிர மற்றபடி பணநாயக வழியில் சென்று அடிமையாகத்தான் ஆகும்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் போராடி பயனில்லை மக்களே வாங்குவதை நிறுத்த வேண்டும், அன்பளிப்பு, இலவசம், தள்ளுபடி, இப்படி எந்த பெயரில் லஞ்சம் வந்தாலும் அதை வாங்காமல் தவிக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் நாமே லஞ்சம் வாங்ககூடாது என போராடுவதும் கொள்ளை அடித்துவிட்டார்கள் என போராடுவதும் கேலிக்குரியது. இலவசங்கள் வேண்டாம் , தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, வீடு இதெல்லாம் வேண்டாம் . இலவசங்களை வாங்குவதற்கு போராடுவதை விட்டுவிட்டு அவற்றை வாங்குவதற்கான வழியை உருவாக்கி தரவேண்டுமென போராடுங்கள். இலவசங்கள் வாங்குவதையும் லஞ்சம் கொடுப்பதையும் நாம் நிறுத்தினால் லஞ்சம் வாங்குவதை அதிகாரிகளும் , இலவசங்கள் கொடுப்பதையும் அரசியல்வாதிகளும் நிறுத்திவிடுவார்கள்.
உங்களது கணிணியில் ப்ராபர்டியில் உங்களது லோகோ (logo ) மற்றும் உங்களது இன்பர்மேசன் வரவைப்பது என்பதை பற்றி பார்போம் . உங்கள் கணிணியில் உங்களது லோகோவோ அல்லது உங்கள் கம்பெனி லோகோவோ கணிணியின் ப்ராபர்ட்டியில் தெரிய வேண்டுமெனில் முதலில் உங்கள் கம்பெனி லோகோவை 103 x 102 சைஸ் கொண்ட பைலாக மாற்றி அதற்கு OEMLOGO என பெயரிட்டு .BMP சேமிக்க வேண்டும் . அடுத்து இன்பர்மேசன் எப்படி வரவைப்பது என்பதை பற்றி பார்போம்
Manufacturer = "YOUR ORGANIZATION NAME"
[support Information]
line1 = <information >
line2 = <information >
line3 = <information >
line4 = <information >
line5 = <information >
line6 = <information >
என டைப் செய்து OEMINFO.INI என பெயரிட்டு சேமித்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கு எத்தனை வரிகள் வேண்டுமோ அத்தனை லைன் சேர்த்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக கீழே உள்ளது போன்று டைப் செய்த்து சேமித்துக்கொள்ள வேண்டும்.
Manufacturer = "GENUINE SYSTEMS"
[support Information]
line1 = Os Installation
line2 = Software Installation
line3 = Network Problems
line4 = Any Hardware Problems
line5 = Please Contact
line6 = GENUINE SYSTEMS
லோகோ பைல் உள்ளிட்ட பிறகு
கணினியிலும் பிராபர்டியை மாற்றலாம் .
ஜாதிகள் இல்லையடி பாப்பா என பள்ளியில் பாடநூலில் வைத்தவர்கள்பள்ளி முடித்து வெளியே வரும்போது மாற்று சான்றிதழில் ஜாதியின்பெயர் போடாமல் தருவதில்லையே ஏன்?
இந்த அரசும் சமுதாயமும் பிறந்ததிலிருந்து சாகும் வரை ஒரு மனிதனை ஜாதிய அடிப்படையிலே பிரித்து வைத்திருகிறார்கள். பள்ளியில்உதவித்தொகை தருவதில் ஆரம்பித்த ஜாதி இன்று ஊழல் வரை ஜாதியைவைத்தே அடையாள படுத்துகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஜாதியைஅடையாளபடுத்தி தாழ்த்தி பேசவோ அல்லது தன்னை தற்காத்துகொள்ளவோ தான் ஜாதிய பயன்படுத்துகிறார்கள். ஜாதியை ஒழிக்கவேண்டும் என போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் ஜாதிய வாக்கெடுப்பு தேவை என போராடுகிறார்கள். வெள்ளையர்கள்நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த போது தனக்கு வேண்ட பட்டவரையும்வேண்ட படாதவரையும் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்ததினால் தான் நாம்நிறைய காலம் அடிமை பட்டு கிடந்தோம்.நாம் ஜாதிவாரியாகபிரிந்திருந்தால் வெள்ளையர்கள் செய்த அதே வேலையைத்தான் இந்தஅரசியல் வாதிகள் தன்னை காப்பாற்றிக்கொள்ள செய்வார்கள் . ஜாதியஅடிப்படையில் ஒன்று படும் போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. அநீதியை எதிர்க்கவோ ஊழலை ஒழிக்கவோ ஒன்றுமே செய்யமுடியாமல்போகும். ஏனெனில் ஒரு ஜாதிக்காரர் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போதுஅதற்கு எதிர் ஜாதிக்காரர்மற்றொரு கட்சிக்கு ஆதரவளிக்கிறார். இதனால்கட்சி காரர் தவறு செய்யும் போது ஆதரவளிப்பவர் சுட்டிகாட்டமுடிவதில்லை அப்படிசெய்தால் இவருக்கு அல்வா கொடுத்துவிட்டு எதிர்ஜாதியை சேர்த்துகொள்வர்.வேறு வழி இல்லாமல் இந்த ஜாதிக்காரர் மற்றகட்சிக்கு ஆதரவு அளிக்கிறார். தவறு செய்பவர்கள் இந்த ஜாதி இல்லையெனில் அந்த ஜாதி என மாறி மாறி குதிரை ஏறுவர்களே தவிர ஜாதியாலும் ஜாதிகட்சியாலும் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லைஅப்படி இருக்க ஏன் ஜாதியின் பெயராலும் , ஜாதிக்கட்சிகளின் பெயராலும்ஒன்று கூட வேண்டும். ஒரு கொள்கைக்காக ஒன்று சேருங்கள். ஜாதியைமறந்து , மதத்தை மறந்து கொள்கைக்காக மட்டுமே ஒன்று சேருங்கள். அப்படி ஒன்று சேர்ந்தால் ஜாதியை ஒழிக்கலாம் , லஞ்சத்தை ஒழிக்கலாம், ஊழலை ஒழிக்கலாம் , ஜனநாயகத்தை காக்கலாம் இல்லையேல்மக்களாட்சி மறைந்து மன்னராட்சி மலரும் மீண்டும் அனைவரும்அடிமைகளாவோம். அபப்டி மாறினால் சுதந்திரம் பெற்று தர எந்த காந்தியாலும் முடியாது. நம்மை அடகு வைக்க ஆயிரம் எட்டப்பன்கள் காத்திருகிறார்கள்.
ஒரு அணிலுக்கு முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு 2 ஆப்பிள்
அணில் சாப்டுடுச்சு 1 சாப்பிடல அது ஏன்னு சொல்லுங்க...
ஏன்னா அந்த ஆப்பிள் பிளாஸ்டிக்.
மறுபடி ஒரு அணிலுக்கு முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு
ஆனா 3 ஆப்பிளையும் அணில்
சாப்பிடல அது ஏன்னு சொல்லுங்க...
ஏன்னா இப்போ அணில் பிளாஸ்டிக்
இப்போ ஒரு ஒரிஜினல் அணில் முன்னால
ஒரு ஒரிஜினல் ஆப்பிள் இருக்கு ஆனால்
அணில் சாப்பிடல ஏன்னு சொல்லுங்க ...
ஏன்னா அணில் டிஸ்கவரி சேனல்ல இருக்கு
ஆனால் ஆப்பிள் TV முன்னாடி இருக்கு
இப்போ அணிலும் ஆப்பிளும் TV ல இருக்கு
ஆனா அணில் ஆப்பிள் சாப்பிடல
ஏன்னு சொல்லுங்க.
ஏன்னா அணிலும் ஆப்பிளும் வெவ்வேற சேனல்ல
சரி இப்போ அணிலும் ஆப்பிளும் ஒரே சேனல்ல
இருக்கு ஆனா அணில் ஆப்பிள் சாப்பிடல
ஏன்னு சொல்லுங்க ..
ஏன்னா TV ஆப் ஆகி இருக்கு ..
நோ நோ கோவப்படாதீங்க நானும் இப்படித்தான்
கோவபட்டேன் இத படிக்கும் போது