கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,




ஒரு  கட்சியே  அதன்  தலைவர்கள் மீது   வழக்கு தொடர்ந்த கொடுமையை இன்று தட்ஸ்தமிழ் இணைய தளத்தை வாசிக்கும் போது கண்டு மிரண்டு போனேன். இந்த கொடுமையை கண்டிக்க ஆளே இல்லையென தீர்மானித்து நானே களத்தில் குதித்தேன். அது எப்படி ஒரு கட்சி அதன் தலைவர் மீது வழக்கு தொடரும் என நீங்க எல்லோரும் கேக்கலாம் நானும் அதையே தான் தட்ஸ்தமிழ் வாசிக்கும் போது எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் அந்த கேள்விய  உங்க கிட்டயும் கேக்குறேன் எப்படி ஒரு கட்சி அதன் தலைவர் மீதே வழக்கு தொடுக்கும் ? அப்படி தொடுக்காது  எனும் பட்சத்தில் தட்ஸ்தமிழ் கொடுத்த செய்தி தவறா? . அப்படி தப்புன்னா எப்படி இவ்ளோ தைரியமா தப்பான செய்திய  வலைத்தளத்தில்  குடுகிறார்கள் ? அப்ப படிப்பவர்கள் என்ன கேனையா? தெரிஞ்சே  இப்படி ஒரு தப்புன்னா? தெரியாம எத்தன தப்பான செய்திய குடுத்திருப்பாங்க? இது நான் வன்மையாக கண்டிக்கிறேன் 
  
தட்ஸ்தமிழ் இணையத்தில் வந்த அந்த செய்தி 

    V/S 
ஒபாமா                                                                        ஒசாமா 
(OBAMA)                                                                         (OSAMA)

( ஒரு எழுத்து வித்தியாசத்தால் உலகின் எதிரெதிர் துருவமாய்  மாறிய மனிதர்கள் )


அமெரிக்க தலைவர்                                           அல்கொய்தா தலைவர்

 உலக மக்களால்                                                   உலக மக்களால்   
ஆச்சர்யமாக                                                         அதிர்ச்சியோடு  
பார்க்கப்பட்ட                                                         பார்க்கப்பட்ட  
அமெரிக்கர்                                                             அரேபியர்  


 இவர்  செய்வது                                                    இவர் செய்தது     
அதிகாரம்                                                                 அராஜகம் 

ஜனநாயகத்தால்                                                  தீவிர  வாதத்தால் 

அதிகாரம்  பெற்றார்                                           அராஜகம் செய்தவர்  


மக்களாட்சி                                                            இவரால் தீவிரவாதம் 
இவரை வளர்த்து விட்டது                             வளர்க்கப்பட்டது 


அதிகாரத்தால்                                                      அராஜகத்தால் 
உயர்ந்தார்                                                               அழிந்தார் 
(அழிக்க உத்தரவிட்டது )                                  (உயிரை விட்டது )