கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  மிக சிறந்த கண்டுபிடிப்பு  








 இல்லை 









இல்லை 









இல்லை 





இல்லை 







இது பில்கேட்ஸ்ன் சிறந்த தயாரிப்பு 








நாமெல்லோரும் ஆமை மற்றும் முயல் கதையை நன்கு அறிவோம். முயல் தனது வேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டது. அது ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. முயலோ வேக வேகமாக ஓடி ஆமையைத் தனக்குப் பின்னால் வெகுதூரம் விட்டு முன்னேறியது. அது, தான் போட்டியை நிச்சயமாக வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஒரு சிறு தூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தது. அது கண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனே ஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்று விட்டதைத்தான் பார்க்க முடிந்தது.சீரான தொடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை. சீரற்ற குறிக்கோளற்ற முயற்சியை விட இது முக்கியமானதாகும்.
           நகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்ற திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். கிருஷ்ணன் அவர்கள் இந்த முயல், ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல், ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டார். ‘ஆமை ஜெயித்தது, முயல் தோற்றது’ என்றனர் மாணவர்கள். கலைவாணர் பதில், அதை அப்படிச் சொல்லக்கூடாது. முயல் ஆமையால் தோற்றது (முயல் + ஆமையால் தோற்றது. முயல் + ஆமை = முயலாமை). முயலாமை என்பது முயற்சி செய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையர்களாக இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள். 
             கட்டுப்பாட்டுடன் ஒன்றை செய்வதும், தவறு நடந்த பிறகு வருந்துவதும் மிகவும் வேதனை தருபவை. பலருக்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் எது அதிகம் வேதனை தருவது என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்.
                                                                
கட்டுப்பாடு ‍ பழக்கத்திற்கு கஷ்டமாகினும் வாழ்க்கைக்கு முறையான வெற்றி தரும் சக்தியாகும்.