எனது இந்த பதிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட GSR க்கு நன்றி
மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது தேவை இல்லாத அழைப்புகள், தேவை இல்லாத குறுஞ்செய்திகள் வருவது அதிகமாகி விட்டது அதுவும் advertisment எனப்படும் விளம்பர குருன்செய்திகளே அதிகம் வருகிறது .பெரும்பாலும் நமது மொபைல் என் தெரிய நாமே காரணமாகி விடுகிறோம் .உதரணமாக இணையதளத்தில் இலவச குறுஞ்செய்தி வசதி உள்ளது எனக்கொண்டால் நாம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதில் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு அக்கறை என பார்த்தல் நாம் முதலில் நமது மொபைல் என்னை பதிவு செய்வோம் அதான் பிறகு நமது நண்பர்களின் எண்களை அதில் சேமித்து வைப்போம் அப்படியாக கிடைக்கும் மொபைல் எண்களை தொகுத்து ஒரு database உருவாக்கி எடுத்துகாட்டாக 10000 மொபைல் நம்பர் உள்ள ஒரு database 5000 ரூபாய் என நிறுவனங்களிடம் என விற்று விடுகின்றனர் இப்படிபல நிறுவனங்களிடமும் database விற்று விடுகின்றனர் . அது மட்டுமல்லாமல் நீங்கள் வேலை நிமித்தமாக கொடுக்க படும் resume மற்றும் browsing சென்டர்களில் பராமரிக்கப்படும் வருகை பதிவேடு போன்றவைகளில் இருந்து நமது மொபைல் எண் களவாட பட்டு database களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய படுகிறது .
சமீபத்தில் எனக்கு நடந்த ஒரு நிகழ்வு அடிக்கடி எண் மொபைல் எண்ணுக்கு விளம்பர குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது முதலில் நான் customer care ல் தொடர்பு கொண்டு சொன்னேன் அவர்கள் DND எனப்படும் Do Not Disturb எனப்படும் சர்வீஸ் ல் பதிவு செய்ய சொன்னார்கள் நானும் பதிவு செய்தேன் . ஒரு அறுபது நட்களிக்கு பிறகு மீண்டும் customer care ல் தொடர்பு கொண்டு நெட்வொர்க் சம்பந்தமான குறுஞ்செய்திகள் வருவது நின்று விட்டன . ஆனால் விளம்பர குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருகின்றன என புகார் செய்தேன். இந்த முறை எந்த என்னில் இருந்து குறுஞ்செய்தி வந்தது என்ற என்னும் கொடுத்தேன். பிறகும் கூட விளம்பர குறுஞ்செய்தி வருவது நிற்கவில்லை.வெவ்வேறு எண்களில் இருந்து விளம்பர குருசெய்திகள் வந்து கொண்டிருந்தன .ஆனால் மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அழைப்பு வந்தது . தொடர்பு கொண்டவர் சொன்னது இது தான் எண் மொபைல் எண்ணில் இருந்து உங்களுக்கு SMS வந்ததால் தங்கள் customer careல் தொடர்பு கொண்டு புகார் கொடுத்த காரணத்தால் அவருடைய மொபைல் எண் முடக்கப்பட்டு விட்டது என்றும் மற்றும் VODAFONE கம்பெனியில் இருந்து அவருக்கு சம்மன் வந்துள்ளதாகவும் கூறினார் . அது மட்டுமின்றி SMS அனுப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் தனது நண்பனிடம் கொடுத்த address proof ஆல் இப்படி நிகழ்ந்துவிட்ட தென்றும் தெரிய படுத்தினர் . தேவையற்ற குறுஞ்செய்திகள் ,அழைப்புகள் வந்தால் customer care ல் தெரியபடுத்துங்கள் நடவடிக்கை எடுகிறார்கள். என்னுடைய எண் AIRTEL தடை செய்யப்பட்ட எண் VODAFONE ஆக தவறு நடந்தால் புகார் தெரிவித்தால் நெட்வொர்க் நிறுவனத்தார் கண்டீப்பாக நடவடிக்கை எடுகிறார்கள் .
ஆகவே நண்பர்களே தங்களது அடையாள அட்டை , புகைப்படம் போன்றவற்றை தொலைதுவிடுவதன் மூலமும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது . மற்றும் உங்கள் மொபைல் எண்ணை முடிந்த மட்டும் பொது இடங்களில் கொடுப்பதையும் சமூக வலைதளங்களில் (Social network ) இணையங்களில் பதிவதை முடிந்தளவு தவிர்க்கலாம் .
இந்த பதிவு பனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறன்