கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

ஒருவர் தனது இரு மாணாக்கரை அழைத்து இந்த உலகிலேயே மிகமிக நல்லவனை அழைத்து வரும் படி கூறினார். மற்றவரிடம் மிக மிக கெட்டவனை அழைத்து வரக்கூறினார்.

இரண்டுபேரும் நன்றாக தேடிவிட்டு திரும்பி வந்தனர்.

நல்லவனை தேடச்சென்றவன் திரும்பி வந்து சொன்னான். ஐயா. எவ்வளவோ தேடிவிட்டேன். இந்த உலகில் ஒரு நல்லவனும் எனக்கு கிடைக்கவில்லை.

கெட்டவனை தேடச்சென்றவன் திரும்பி வந்து சொன்னான். ஐயா. எவ்வளவோ தேடிவிட்டேன். இந்த உலகில் ஒரு கெட்டவனும் எனக்கு கிடைக்கவில்லை.

குரு சொன்னார்.

உலகில் இரண்டும் கலந்தே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கும்.
உங்கள் மனநிலையைப் பொறுத்தே மற்றவரை நல்லவரா கெட்டவரா என எடைபோடுகிறீர்கள்.

நீதி: கெட்டவன் எவரிடத்திலும் நல்லவரை காணமாட்டான். நல்லவன் எவரிடத்திலும் கெட்டதை காணமாட்டான்.

0 comments:

Post a Comment